உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பயங்கரவாதத் தடைச் சட்டம் இவ்வருடம் அடியோடு இரத்து.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.

பாதாள உலகக் குழுக்களுக்கு ஆதரவளித்த அரசியல் தரப்பினர் இந்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதில் ஆச்சரியமேதுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:-
“அரசியல் அநாதைகளாக இருந்தவர்கள் தற்போது சுரேஷ் சலேவின் விவகாரத்தைக் கையில் எடுத்து, அவருக்குச் சார்பாகப் பேசி வருகின்றார்கள். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இடைநிறுத்துமாறு கோரி ஒரு தரப்பினர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்காக விசாரணைகளை நிறுத்திவிட முடியாது. அவ்வாறு செய்தால், சட்டத்தின் மீது நாட்டு மக்கள் எவ்வாறு நம்பிக்கை வைப்பார்கள்? சட்டத்தின் முன் எவருக்கும் விசேட சலுகைகள் வழங்கப்படமாட்டாது.

சுரேஷ் சலேவுக்காகப் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், மக்களுக்குப் போலியான விவரங்களைக் கூறாமல் நீதிமன்றத்தை நாடலாம். அங்கு தமது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து நீதியைப் பெற்றுக்கொள்ளலாம். இதில் எங்களுக்கு எவ்விதப் பிரச்சினையும் இல்லை.

அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த ஆண்டுக்குள் முழுமையாக இரத்துச் செய்யப்படும். தற்போது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மட்டுமே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டிருந்தாலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களும் போதைப்பொருள் வர்த்தகமும் இன்னும் நீடிக்கவே செய்கின்றன. இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முறையான சட்டம் இயற்றப்பட வேண்டியது அவசியமாகும்.

இதற்கமையவே, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டு மாத காலத்துக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது. பாதாள உலகக் குழுக்களைக் கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கவும் அரசு கடுமையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

38 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

46 0 0