உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஊடகங்களை அடக்குகிறோம் என்பது அப்பட்டமான பொய்.!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
39 பார்வைகள்

“நாம் ஊடகங்களை அடக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் திட்டமிட்டு போலியான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்” என வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளர் தயாபரன் தெரிவித்துள்ளார்.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றையதினம் உப தவிசாளர் தயாபரன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, சபை அமர்வுகளில் ஊடகவியலாளர்களை அனுமதிப்பது தொடர்பாகப் பல காரசாரமான விவாதங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினர்கள் தவிசாளர் மற்றும் செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.

இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த உப தவிசாளர் தயாபரன் குறிப்பிட்டதாவது,
“ஊடகவியலாளர்கள் தங்களை உறுதிப்படுத்தக்கூடிய முறையான ஆவணங்களைச் சபையில் சமர்ப்பித்து, சபை அமர்வுகளில் தாராளமாகக் கலந்துகொள்ள முடியும். அதற்கு எந்தத் தடையும் இல்லை.

அந்தவகையில், ஊடகவியலாளர் லின்ரன் அவர்களும் தனது ஊடக அடையாள அட்டையை முறையாகச் சமர்ப்பித்தே இன்றைய சபை அமர்வில் கலந்துகொண்டிருந்தார்.

சபை மரியாதையையும் அதன் தனித்துவத்தையும் பேணும் பொருட்டே ஊடகவியலாளர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒருவேளை, அந்த நிபந்தனைகளில் ஊடக அடக்குமுறை சார்ந்த விடயங்கள் ஏதேனும் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்பட்டால், அவற்றை உடனடியாக நிவர்த்தி செய்ய நாம் தயாராகவே உள்ளோம்.”

மேலும், தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்கள் இதனைத் தங்களது சுய அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள். ‘ஊடக அடக்குமுறை’ என்ற போலியான பிம்பத்தை உருவாக்கி, மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர் என்றும் உப தவிசாளர் தயாபரன் இதன்போது சாடினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

41 0 0
இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

70 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

51 0 0