உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

சமஸ்டிக்காகவே இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது – சுமந்திரன் தெரிவிப்பு!

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
45 பார்வைகள்

சமஸ்டி தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே என,இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது  என இலங்கை தமிழரசுக்  கட்சியின் பொதுச்செயலாளரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ  சுமந்திரம் தெரிவித்துள்ளார்.

நாகர் கோவிலில் நிகழ்வொன்றில் கலந்து கொண்டபின்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இலங்கை தமிழரசு கட்சி ஒற்றைய ஆட்சியை வன்மையாக  எதிர்க்கின்ற ஒரு கட்சி. தமிழரசு கட்சி உருவாக்க பட்டதே ஒற்றை ஆட்சிக்கு எதிராக சமஸ்டிக்காக,  இலங்கை தமிழரசு கட்சி உருவாக்க பட்டதே சமஷ்டி கோரிக்கைக்காக.

தமிழரசு கடைசியை   சமட்டி கட்சி சமட்டி கட்சி என்று கேலி செய்தவர்கள் தான் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ். 

1971 ஆம் ஆண்டு ஜீ.ஜி  பொன்னம்பலம்  அவர்கள் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. 

அவருடைய கட்சியாளரான தியாகராசா பேசுகிறபோது குறிப்பிட்டார்  எமது தலைவர் இருந்திருந்தால் சமஷ்டி கோரிக்கை எவ்வளவு மோசமானது என்பதை என்னை விட மிகத் திறமையாக பேசி இருப்பார் என்று பாராளுமன்றத்திலேயே சொல்லியிருக்கின்றார்.

ஆகவே சமஸ்டியை மிக மோசமாக விமர்சித்தவர்கள் இன்றைக்கு தங்கள்தான் அதை  உருவாக்கியவர்கள் போல  மக்களை பிழையாக வழி நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

எங்களுடைய கட்சியினுடைய முழுமையான கொள்கையே சமஷ்டி ஆட்சி ஒன்று உருவாக்க வேண்டும்  என்பது

பெயர் பலகைகளிலே நாங்கள் தொங்கிக்கொண்டு இருக்கவில்லை.

எக்கிய  என்ற சொல்லிற்கு அர்த்தம் ஒன்று ராஜ்ய என்ற சொல்லுக்கு அர்த்தம் நாடு. ரஜ்ய என்று சொன்னால்  ஆட்சி முறை. இப்போது இருக்கின்ற அரசியல் அமைப்பிலே சொல்லப்பட்டிருப்பது எக்கிய ராஜ்ய அது ஒற்றை ஆட்சி என்பதாகும்.

அது கடந்த காலத்திலே செய்யப்பட்ட வரைவிலே எக்கிய ராஜ்ய  என்று மாற்றப்பட்டது அதாவது ஒரு நாடு என்று. இது ரஜயா, ராஜ்ய என்ற சத்தம் தமிழ் மக்களுக்கு புரியாமல் இருந்தாலும் தமிழை விட சிங்களம் கூடுதலாகவே தெரிந்திருக்கின்ற கஜேந்திரகுமாருக்கு இது நன்றாகவே தெரியும்

ஒற்றையாட்சி என்ற பதத்திலிருந்து ஒருமித்த நாடு என்று மாற்றப்பட்டது எங்கள் எல்லோரையும் விட கஜேந்திர குமாருக்கு நன்றாகவே தெரியும்.

இவர் தொடர்ச்சியாக மக்களைப் பிழையாக வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

60 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

60 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

78 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

57 0 0