உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

மருத்துவர்கள் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு கோரி ரவிகரன் எம்.பி. கடிதம்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
30 பார்வைகள்

சுதேச மருத்துவ சேவையில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட இடமாற்றங்களால் ஏற்பட்டுள்ள மருத்துவர்கள் பற்றாக்குறையை சுட்டிக்காட்டி, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர் தில்லையம்பலம் சர்வானந்தனிடம் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் 2026.06.16 இன்று வடமாகாண சுதேச வைத்தியத்துறைத் திணைக்கள ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் குறித்த கடித்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

2025 ஆம் ஆண்டிற்கான இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையின் வருடாந்த இடமாற்றங்களில் பதிலீடு இன்றி வழங்கப்பட்ட 77 இடமாற்றங்களில் 17 இடமாற்றங்கள் வன்னி மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய பதிலீடு இன்றிய இடமாற்றங்களினால் உருவான வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடி பதிலீடுகளை வழங்க வேண்டும் என்றும், அல்லது முன்னதாக தீர்மானிக்கப்பட்டபடி ஒப்பந்த அடிப்படையில் புதிய சுதேச மருத்துவர்களை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், 2026.04.29 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும், 2026.06.03 அன்று நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும், குறித்த பதிலீடுகளை விரைவாக வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனையடுத்து, வடமாகாண சுதேச வைத்தியத்துறை திணைக்கள ஆணையாளர் மற்றும் வடமாகாண பிரதம செயலாளர் ஆகியோரால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக மேலும் காலதாமதமின்றி வன்னி தேர்தல் மாவட்டத்தில் உள்ள சுதேச மருத்துவர்களின் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், மேற்கொள்ளப்படும் இடமாற்றங்கள் மற்றும் பதிலீடுகள் தொடர்பான இற்றைப்படுத்திய அறிக்கையையும் வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கடிதம் வடமாகாண ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கும் பிரதியாக அனுப்பப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0