உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

முள்ளிவாய்க்கால் நினைவுப் பதாகையை அறுத்தெறிந்த பருத்தித்துறை பொலிஸார்  !!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
26 பார்வைகள்

முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பருத்தித்துறை, சுப்பர்மடம் பகுதியில் கட்டப்பட்டிருந்த நினைவுப் பதாகையைப் பொலிஸார் பலவந்தமாக அகற்றியுள்ளதோடு, அது குறித்துக் கேட்கச் சென்ற இளைஞரையும் அச்சுறுத்தியுள்ளனர்.

சுப்பர்மடம் பகுதியில் எதிர்வரும் 18 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுக்க அப்பகுதி மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக, பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா ஆகியோரின் உருவப்படங்கள் தாங்கிய, “மே 18 இனத்தின் வலி! மறக்கவும் மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம்!!” என்ற வாசகங்கள் அடங்கிய பதாகை ஒன்றினை மக்கள் கட்டியிருந்தனர்.

இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் சிவில் உடையில் அங்கு வந்த பருத்தித்துறை பொலிஸார், திடீரென அந்தப் பதாகையை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர்.

பதாகை அகற்றப்பட்டது குறித்துக் கேள்வி எழுப்பச் சென்ற அப்பகுதி இளைஞரை, “உனக்கு எதிராக வழக்குத் தொடருவோம்” என்று பொலிஸார் கடுமையாக அச்சுறுத்தியுள்ளனர். அத்துடன், அந்த இளைஞரின் பெயர் மற்றும் விவரங்களைப் பொலிஸார் பலவந்தமாகப் பெற்றுக்கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பருத்தித்துறை வலயத்தில் ஆங்காங்கே கட்டப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பான பதாகைகளை உடனடியாக அகற்றுமாறு பொலிஸார் தொடர்ச்சியாகக் கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நினைவேந்தல் வாரத்தில் பொலிஸாரின் இத்தகைய நடவடிக்கைகள் அப்பகுதியில் பெரும் பதற்றத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

70 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0