உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

அரசு செய்த ஊழலுக்கு மக்கள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும்?

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
20 பார்வைகள்

அரசின் ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளின் சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தக் கூடாது என்று பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில காட்டமாகத் தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

எரிபொருள் இறக்குமதியால் ரூபாயின் மதிப்பு வீழ்ந்துள்ளது என்று ஜனாதிபதி கூறுவது ஒரு ‘பச்சைப்பொய்’ என்றும் கம்மன்பில சாடினார்.

“தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததால் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் முடங்கியது. அந்தப் பற்றாக்குறையை ஈடுகட்டவே அதிக விலைக்கு டீசல் வாங்கப்பட்டது.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகிலேயே எரிபொருளுக்கு அதிக விலை கொடுத்த நாடு இலங்கைதான் என எச்.எஸ்.பி.சி. வங்கி தரவுகள் கூறுவதைச் சுட்டிக்காட்டிய அவர், விநியோகஸ்தர்களுக்கு அதிக இலாபம் வழங்கியது ஏன்? என்றும் வினவினார்.

“அதிகாரிகளின் ஊழலால் ஏற்பட்ட இழப்பை மக்கள் மீது சுமத்தாமல், அந்தப் பணத்தை அரசு தனது ‘பெலவத்தை கணக்கிலிருந்து’ (கட்சி நிதி) ஈடு செய்ய வேண்டும்” என்றும் அவர் சவால் விடுத்தார்.

தற்போது நிலவும் கடும் மழை மற்றும் வெள்ள அபாயத்தைக் கருத்திற்கொண்டு, பிள்ளைகளின் பாதுகாப்புக்காகப் பாடசாலைகளுக்கு உடனடியாக விசேட விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் அரசை வலியுறுத்தினார்.

ஜனாதிபதி அநுரகுமார மற்றும் ரில்வின் சில்வா ஆகியோர் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து முன்கூட்டியே கருத்துத் தெரிவிப்பது சட்டத்தின் ஆட்சியைச் சீரழிக்கின்றது என்றும் கம்மன்பில குற்றம் சாட்டினார்.

“நீதிமன்றத்தின் மீதான இந்த அரசியல் அச்சுறுத்தல் குறித்து, அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஆதாரங்களுடன் விளக்கமளிக்கவுள்ளோம்.” என்றும் உதய கம்மன்பில இந்த ஊடகச் சந்திப்பில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0