உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

குமுதினி படகில் படு கொ*லை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 4 மாதங்கள் முன்
34 பார்வைகள்

குமுதினி படகில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15-05-2026) நெடுந்தீவில் அமைந்துள்ள நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.

கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை பல்வேறு தேவைகளுக்காகவும் நெடுந்தீவு மாவிலித் துறையில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குழுதினி படகில் பயணித்த பச்சிளம் குழந்தை உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது நினைவு நாள் இன்றாகும்.

இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 41வது ஆண்டு நினைவு நிகழ்வு நெடுந்தீவு மாவிலித் துறையில் அமைந்துள்ள நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.

இன்று காலை 9.15 மணிக்கு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.

நிகழ்வில் வேலன் சுவாமி, நெடுந்தீவு பங்குத்தந்தை, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதே வேளை இன்று காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திர பிள்ளையார் ஆலயம் மற்றும் நெடுந்தீவு மாவிலித்துறை சவேரியார் ஆலயம், நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயம், மற்றும் நெடுந்தீவு தேவசபை ஆலயம் என்பவற்றில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகளும் நடைபெற்றன.

நினைவு வணக்க நிகழ்வை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளின் தொடரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இதன்போது தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நுவரேலியா, ஹட்டன் சொகுசு பேருந்தில் பயணிகளுக்கு அசௌகரியம்!

சொகுசு AC பேருந்து எனக் கூறி ரூ.350 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பயணிகளுக்கு வழங்கப்படும் வசதி இதுதானா என பயணிகள் விசனம். நுவரேலியாவில் இருந்து ஹட்டன் நோக்கி…

72 0 0
இலங்கை செய்திகள்

ஒலியை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!

ஒலிபெருக்கிகள் மற்றும் ஒலி பெருக்கும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளைத் தடுக்கும் பொருட்டு, கடும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை…

38 0 0
இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

72 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

69 0 0