உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
47 பார்வைகள்

நீர்கொழும்பு மற்றும் பாதுக்க பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட மதுபான போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஸ்க்ரின் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 67.5 லீற்றர் (90 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் 53 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாதுக்க, உடுமுல்ல பகுதியில் ஹோமாகம குற்றப் புலனாய்வு பிரிவனரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது.

இதன்போது 67.5 லீற்றர் காய்ச்சப்பட்ட மதுபானம், மதுபானம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 1080 லீற்றர் (06 பீப்பாய்கள்) கோடா என்பன கைப்பற்றப்பட்டன.

இதன்போது பாதுக்க பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்.!

மன்னார் மாவட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் (LRC) கீழ் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை மன்னார் மாவட்ட…

65 0 0
இலங்கை செய்திகள்

சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம்; ஒருவர் கொ*லை.!

தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகொட பகுதியில், நேற்று வெள்ளிக்கிழமை (28) சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் 35 வயதுடைய நபர் ஒருவர் தடியால் அடித்துக் கொலை…

55 0 0
இலங்கை செய்திகள்

கனிம வள அகழ்வுக்கு புதிய நடைமுறை.!

மன்னார் மாவட்டத்தில் கருங்கல், கிரவல் மற்றும் மணல் உள்ளிட்ட கனிம வளங்களை அகழ்ந்தெடுப்பது தொடர்பில் புதிய சுற்றுநிருபத்தின் அடிப்படையில் நடைமுறைகள் குறித்து விசேட கலந்துரையாடல் மன்னார் மாவட்ட…

46 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் நாட்டுக்குத் திரும்ப வசதி செய்யப்படும்.!

கடந்த கால யுத்த காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் வசிக்கும் மக்கள் மீண்டும் இந்நாட்டுக்கு திரும்புவதற்கு இருந்த தடைகளை நீக்குவதற்கு கடந்த அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார…

65 0 0