உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பூவரசங்குளம் மக்களின் காணி பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை – சத்தியலிங்கம் உறுதி.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

வவுனியா மாவட்டத்தின் பூவரசங்குளம் மற்றும் அண்மித்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுடன் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப. சத்தியலிங்கம் குறைகேள் சந்திப்பில் ஈடுபட்டார்.பூவரசங்குளம் ஸ்ரீ முருகன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், வட்டார பிரதேச சபை உறுப்பினர் மகாதேவா ரவீந்திரனும் கலந்து கொண்டார்.


இதன்போது பொதுமக்கள் முன்வைத்த பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர், குறிப்பாக வனவள திணைக்களத்தினரால் கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் மக்களின் காணிகள் தொடர்பான முறைப்பாடுகள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார்.


இந்த விடயங்களை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்த அவர், அரசாங்க அதிபர், வனவள திணைக்களம்மற்றும் பிரதேச செயலாளர் உள்ளிட்டோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

67 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0