பொதுமக்கள் நலன்கருதி நடைபெற்ற நடமாடும் சேவை.!
கண்டி கறிஷ்ட செட்டிக் நிறுவனம் இணைந்து நோர்வூட் பிரதேச செயலாளர் பிரிவின் மேற்பார்வையில் வெளி ஓயா 320.P கிராம உத்தியோகத்தர் பிரிவில் பொதுமக்கள் நலன்கருதி இன்று நடமாடும் சேவை நடவடிக்கைகள் நடைபெற்றது.
இதில் பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ்கள், மூத்தோர் அடையாள அட்டைகள் ஆகியவற்றுக்கான முன்னோடி நடவடிக்கைகள் நடைபெற்றது.
இதில் நோர்வூட் பிரதேச உதவி செயலாளர் அவர்களும், தோட்ட அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர் திருமதி வீணாதேவி, கண்டி செட்டிக் நிறுவனத்தின் அதிகாரி திரு நிக்கோல்ஸ் அவர்களும், பிரதேச சபை உறுப்பினர் திருமதி கே .நிஷாந்தினி அவர்களும், தோட்ட வைத்திய அதிகாரி அவர்களும் கலந்துக் கொண்டார்கள்.
இதன்போது அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நன்மை அடைந்தார்கள்.


