உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கணித, உயிரியல் பிரிவுகளில் ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் யாழ். மாவட்டத்தில் முதலிடம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

வெளியாகியுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளில், யாழ்ப்பாணம் மாவட்ட மட்டத்தில் கணித மற்றும் உயிரியல் பிரிவுகளில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவர்கள் முதலிடங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்.

கணிதப் பிரிவில் அனுராகந்தன் விஸ்வகாந்தன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 12 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார். அதேவேளை உயிரியல் பிரிவில் சந்திரபாலா கதுசன் 3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 20 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் உமாபதி கிருஷாந்த் 2 ஏ, பி சித்தியைப் பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தையும், தேசிய ரீதியில் 50 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

ஹாட்லிக் கல்லூரியில் கணிதப் பிரிவில் 10 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 2 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும் பெற்றுள்ளதுடன், உயிரியல் பிரிவில் 6 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், 4 மாணவர்கள் 2 ஏ, பி சித்திகளையும் பெற்றுள்ளனர்.

வர்த்தகப் பிரிவில் 2 மாணவர்கள் 3 ஏ சித்திகளையும், கலைப் பிரிவில் ஒரு மாணவன் 3 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

68 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0