உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நெல் வயலில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டவருக்கு நேர்ந்த துயரம்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கம்பனிவட்டை வயற்பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலில் 68 வயதான கூலித் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை கந்தசாமி என்பவரே உயிழந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

கூலித் தொழிலாளியான இவர் கடந்த இரண்டு வருடகாலமாக நெல் வயல் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டு வந்துள்ளார். வயலில் தங்குவதற்கு உயரமான கட்டடம் அமைக்கப்படுள்ளது. அதிலிருந்து ஒரு முறை தவறிவிழுந்துள்ளார். இதையடுத்து தரையில் உறங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவ நேரம் காட்டு யானை வயல் வாடியிலுள்ள நெல் மூட்டையினை உட்கொண்டதை அவதானித்து இவர் யானையை விரட்ட முற்பட்டவேளை அந்த யானை இவரை தாக்கிய பின்னர் தூக்கிவீசியதால் அவர் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் வயல்வெளியில் சேற்றில் புதைந்து காணப்பட்டது.
திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசிர் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் மரண விசாரணைகளை மேற்கொண்டார்.
ஆயித்தியமலை பொலிஸார் இச் சம்பவம் குறித்து குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

67 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

70 0 0
இலங்கை செய்திகள்

சாணக்கியன் எம்.பிக்கும் அவுஸ்ரேலியத் தூதுவருக்கும் இடையே சந்திப்பு

படம் இணைப்பு – வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் குறித்து இரா. சாணக்கியன் எம்.பியுடன்ஆஸ்திரேலியாத் தூதுவர் பேச்சு! இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு…

61 0 0
இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

62 0 0