உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஊழல் குற்றச்சாட்டு: வலுசக்தி அமைச்சர் தானாகவே பதவி விலக வேண்டும் – நாமல் தெரிவிப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னிட்டு, எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கும் வரை காத்திருக்காமல் அவர் தானாகவே பதவி விலக வேண்டும் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது, அரசாங்கமே முறைகேடுகள் இடம்பெற்றதை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் அதற்கான பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


மேலும், குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்டாலும், அதன் மூலம் ஏற்படும் நட்டத்தை இறுதியில் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும் எனவும் அவர் எச்சரித்தார்.ஆளுங்கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு ஊழல் தொடர்பில்லை என முன்னர் கூறப்பட்ட நிலையில், தற்போது வலுசக்தி அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அந்தக் கூற்றுகளுக்கு முரணானவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து கருத்து தெரிவித்த அவர், சஜித் பிரேமதாஸ, ரணில் விக்கிரமசிங்க மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசியல் சக்திகள் நாட்டின் அரசியல் தளத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக குறிப்பிட்டார்.


மூத்த தலைவர்களை புறக்கணிப்பது தவறு என்றும், புதிய தலைமுறைகள் உருவாக அனுபவமிக்க தலைவர்களின் வழிகாட்டல் அவசியம் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.கடந்த தவறுகளை திருத்தி, நவீன அணுகுமுறையுடன் நாட்டை முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

63 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0