உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: இஷாரா செவ்வந்தி விசாரணையை விரைந்து முடிக்க நீதிமன்ற உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
36 பார்வைகள்

பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’ கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி மீதான விசாரணைகளை விரைந்து நிறைவு செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க எஸ். போதராகம முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதிமன்றம் கடும் அறிவுறுத்தல் வழங்கியது.


இவ்வழக்கின் 15வது சந்தேகநபராகக் குறிப்பிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தொடர்பான விசாரணைகளில் முன்னேற்றம் இல்லாததை நீதிவான் சுட்டிக்காட்டியதுடன், “சந்தேகநபரைத் தடுத்து வைத்திருப்பதில் மட்டுமே பயன் இல்லை; முறையான விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்” எனதெரிவித்தார்.


மேலும், ஆரம்ப விசாரணைகளின் போது சந்தேகநபர் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்யப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், தற்போது விசாரணையில் தேக்கநிலை காணப்படுவதாகவும் நீதிமன்றம் கவனம் செலுத்தியது.


இஷாரா செவ்வந்தி தனது இரண்டாவது 90 நாள் தடுப்புக்காவல் காலத்தையும் கடந்துள்ள நிலையில், அவரைச் சார்ந்த முழுமையான விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது.இன்றைய விசாரணையின் போது சந்தேகநபர்கள் காணொளி தொடர்பு முறையின் மூலம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேகநபர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

64 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0