உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஜூலை 28 வரை ஒத்திவைப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
38 பார்வைகள்

யாழ்ப்பாணம் மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கை எதிர்வரும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.


1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்தப் புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.இந்தச் சம்பவம் தொடர்பாக, தனது மகனை இழந்த 81 வயதுடைய ஸ்டீபன் மரில்டா மற்றும் தீவக முன்னேற்றக் கழகத் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 4 ஆம் திகதி ஊர்காவற்றுறை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இன்றைய விசாரணையின் போது, பொலிஸார் தரப்பிலிருந்து சான்றுகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட தரப்பும் காணாமற்போனோர் அலுவலகத்தினரின் பிரதிநிதிகளும் முன்னிலையாகினர்.முன்னதாக, புதைகுழி அகழ்வுப் பணிக்கான வசதிகள் இல்லை என பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில், வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவிற்கு மாற்றப்பட்டிருந்தது.


இந்நிலையில், சம்பவம் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததுடன், மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு மீண்டும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

63 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

39 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0