உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மின்கட்டண உயர்வு, பொருளாதார நெருக்கடி குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் அவசர ஆலோசனை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்ட முக்கிய விடயங்களை ஆராய்வதற்காக, கூட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று கொழும்பு நாராஹேன்பிட்டியவில் முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.


இந்தக் கலந்துரையாடலில் தரமற்ற நிலக்கரி இறக்குமதி காரணமாக மின்உற்பத்தி மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனைத் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயவும் தீர்மானிக்கப்பட்டது.


மேலும், எரிபொருள் விலை உயர்வு மற்றும் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.அத்துடன், “தரமற்ற நிலக்கரி” தொடர்பான கருத்தரங்கு தொடர்களை மாத்தறை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இந்தச் சந்திப்பில் நிமல் சிறிபால டி சில்வா, பாடலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.இதேவேளை, மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பான கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் விசேட ஊடக சந்திப்பு நாளை நடத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

63 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0