இரு உள்ளூராட்சி மன்றங்கள் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளன – உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!
மீதொட்டமுல்ல பொத்துவில்கும்புர பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டியதன் மூலம் கொழும்பு மாநகர சபை மற்றும் கொலன்னாவ நகரசபை ஆகியன மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2009 முதல் 2017 வரை குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் குப்பைகளை கொட்டியதன் மூலம் அடிப்படை மனித உரிமைகளை உள்ளூராட்சி நிறுவனங்கள் மீறியுள்ளதாக நீதியரசர் யசந்த கோதாகொட சுட்டிக்காட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி இதற்கு அனுமதி வழங்கிய நகர அபிவிருத்தி அதிகார சபையும் தமது கடமையைச் செய்யத் தவறிய மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகார சபையும் இதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.