யானைத் தந்தங்களுடன் இருவர் கைது.!
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் பகுதியில் வைத்து , இரண்டு யானைத் தந்தங்களுடன் இரு சந்தேக நபர்கள் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த 34 மற்றும் 29 வயதுகளையுடைய சந்தேக நபர்களாவர்.
சேருநுவர வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட யானைத் தந்தங்களுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை வனஜீவராசிகள் அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.