உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
41 பார்வைகள்

மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் கடும் வெப்பமான வானிலை நிலவுகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.

அத்துடன் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 24 அடி குறைந்துள்ளது. இன்னும் 96 அடி நீர்த்தேக்கத்தில் உள்ளது. காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 41 அடி குறைந்துள்ளது. அதேபோல் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 3 மீற்றர் குறைந்துள்ளது 1191 மீற்றர் நீர்த்தேக்கத்தில் உள்ளது. கென்யோன் நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் கொள்ளளவை விட 33 மீற்றர் குறைந்துள்ளது 670 மீற்றர் நீர்த்தேக்கத்தில் உள்ளது.

மலையகத்தில் உள்ள அனைத்து காட்டாறுகள் நீர் வீழ்ச்சிகள், ஓடைகள் என்பனவற்றில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது.

இதன் காரணமாக மலையக பகுதியில் பல நகரங்கள், கிராமங்கள், தோட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நீர் மின் நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர்த்தேக்கங்களான காசல்ரீ, மேல் கொத்மலை, மவுஸ்சாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதன் காரணமாக எதிர்காலத்தில் நீர் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்திற்க்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான சாமிமலை ஓயா, காட்மோர் ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா மற்றும் ஏனைய ஓடைகளில் நீர்வரத்து குறைந்து கொண்டே வருகிறது. அதேபோல் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீரை வழங்கும் பிரதான கங்கைகளான மாஎலிய ஓயா, ஹட்டன் ஓயா என்பன ஓடைகளாகி மிக மிக சொற்பளவில் நீரையே வழங்குகிறது.

இந்த நிலை தொடர்ந்தால் மின் தடை ஏற்படும் அபாயமும் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பூநகரியில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது!

பூநகரி எருமை தீவு கடல் எல்லையில் இரகசிய கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயற்சி – மக்கள் ஒன்றுகூடியதால் கைவிடப்பட்டது! பூநகரி கிராஞ்சி எல்லைப் பகுதியான எருமை தீவு…

48 0 0
இலங்கை செய்திகள்

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்ற அரசியல்வாதிகளிடம் விசாரணை

ஷிரான் பாசிக்கிடம் பணம் பெற்றஅரசியல்வாதிகளிடம் விசாரணை இலங்கையின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான ஷிரான் பாசிக், தற்போது மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள…

64 0 0
இலங்கை செய்திகள்

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் மீனவர்கள் மூவர் கைது!

மன்னார் மாவட்டத்தில் முறையற்ற விதத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம்? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (28) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களிடம் இருந்து…

40 0 0
இலங்கை செய்திகள்

காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் நீதி கோரும் மாநாட்டுக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதியோ பொறுப்புக்கூறல்களோ வழங்கப்படாமல், அற்ப சலுகைகளுடன் சம்பந்தப்பட்ட கோப்புகளை மூடிவிட அரசு செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின்…

46 0 0