மணற்காடு சவுக்கம் காட்டில் தீப்பரவல்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கம் காட்டில் இன்று பிற்பகல் தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்கு பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் உபதவிசாளர் காந்தரூபன், செயலாளர் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த சவுக்கு மர காட்டிற்கு அடிக்கடி விஷமிகள் தீ வைப்பது பல வாரங்களாக நடைபெற்று வருவதுடன் நாளாந்தம் சுமார் 50க்கு மேற்பட்ட விறகு வியாபாரிகள் சவுக்கம் விறகுகளை வெட்டி விறகு தேவைக்காக கொண்டு செல்வதும் குறிப்பிடத்தக்கது.
தீயணைப்பு பணியில் பிரதேச மக்களும் இணைந்திருந்தனர்.
தீப்பற்றிய பகுதியை வனவள திணைக்கள அதிகாரிகளும் நேரில் சென்று நிலைமைகளை ஆய்வு செய்தனர்.



