மே வரை இனிப்பு பண்டங்களின் விலை உயராது.!
எதிர்வரும் மே மாதம் வரை பிஸ்கட், ஐஸ்கிரீம் மற்றும் சொக்லேட் உள்ளிட்ட இனிப்புப் பண்டங்களின் விலைகளை அதிகரிக்காதிருப்பதாக இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் மூலப்பொருட்களின் விலைகள் மாற்றமடைந்துள்ள நிலையிலும், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மே மாதம் வரை தற்போதைய விலைகளிலேயே இந்த இனிப்புப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.