உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பொலிஸார் அரசியல் நோக்கத்தில் செயற்படுகின்றனர் – நாமல் குற்றச்சாட்டு .!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
37 பார்வைகள்

மக்கள் விடுதலை முன்னணியின் வழிகாட்டுதலுக்கு இணங்க பொலிஸ் மா அதிபர் செயற்படுகிறார் என்றும், பொலிஸார் அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்தி சாட்சியாளர்களை அச்சுறுத்தி வாக்குமூலங்களைப் பெறுகின்றனர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பிற்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.மேலும், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியை காரணம் காட்டி மக்கள்மீது சுமைகளை திணிக்க அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்றும், அந்த நிலையை சமாளிக்கும் திறன் அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் நெருக்கடி நிலைகளை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தியதாக மக்கள் விடுதலை முன்னணி மீது குற்றஞ்சாட்டிய அவர், தாம் அந்த வகையில் செயற்படமாட்டோம் என்றும் மக்களை வீதிக்கு இறக்கவோ போராட்டங்களைத் தூண்டவோ திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.


எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்னுற்பத்தி குறைபாடு தொடர்பான எச்சரிக்கைகளை அரசாங்கம் புறக்கணித்துள்ளதாகவும், தரமற்ற நிலக்கரி கொள்வனவால் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் நோக்கங்களுடன் நடைபெறும் இத்தகைய செயற்பாடுகள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0