உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

மலைநாட்டு தொடருந்து பாதை சீரமைப்பு இறுதிக் கட்டம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கள ஆய்வு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
39 பார்வைகள்

சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா பேரழிவினால் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் மட்டுமல்லாது, பொதுமக்களின் அடிப்படை வசதிகளும் கடுமையாக சேதமடைந்தன. இதில் இலங்கையின் ரயில் பாதை அமைப்பும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட ரயில் பாதைகள் மற்றும் பாலங்களை சீரமைக்கும் பணிகள் “நாடு மீள்கட்டமைப்பு” தேசிய திட்டத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கொழும்பு – பதுளை மலைநாட்டு ரயில் பாதையில் நானுஓயா மற்றும் அம்பேவெலா இடையிலான எல்ஜின் நீர்வீழ்ச்சி அருகே நடைபெற்று வரும் இறுதிக்கட்ட பணிகளை அமைச்சர் பிமல் ரத்நாயக்க 25.03.2026 அன்று நேரில் ஆய்வு செய்தார்.இந்த பேரழிவினால் நானுஓயா முதல் அம்பேவெலா வரையிலான பாதையில் 14 இடங்களில் நிலச்சரிவு, இடிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக சேதம் ஏற்பட்டிருந்தது.

அதில் 13 இடங்களில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்து வழக்க நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது எல்ஜின்நீர்வீழ்ச்சி மற்றும் அம்பேவெலா இடையிலான கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.
இந்நிகழ்வில் ரயில்வே துறையின் உயர் அதிகாரிகள், உட்பட பிராந்திய பிரதம பொறியாளர் தனுஷ்க திஸாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

54 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0