மணல்காட்டுக்கு சுற்றுலா சென்றவர்களை பொலிஸார் தாக்கிய விவகாரம்-மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை ஆரம்பம்.!
பருத்தித்துறையிலிருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்ற இளைஞர்கள் மீது சிவில் உடையில் இருந்த பொலிஸார் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், பொலிஸ் வாகனத்தில் வந்த சிவில் உடையணிந்த பொலிஸார் இளைஞர் குழுவை தாக்கியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த மூவர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், யாழ்ப்பாண பிராந்திய அதிகாரிகள் காயமடைந்தவர்களிடம் மந்திகை வைத்தியசாலையில் வைத்து வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.