உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பயணப் பொதிக்குள் காத்திருந்த அதிர்ச்சி; கட்டுநாயக்கவில் விலங்குகளுடன் சிக்கிய இலங்கையர்.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
31 பார்வைகள்

சுமார் 9 இலட்சத்து 98 ஆயிரம் ரூபா பெறுமதியான 38 செல்லப்பிராணிகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் இன்று அதிகாலை (26.03.2026) கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளார்.தாய்லாந்தின் பேங்காக் நகரில் இருந்து தாய் ஏர்வேஸ் விமான சேவைக்கு சொந்தமான TG-307 விமானம் மூலம் இன்று அதிகாலை 12.01 மணியளவில் அவர் கட்டுநாயக்கவை வந்தடைந்தார்.

சுங்க அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சோதனையின் போது, பயணப் பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 38 விலங்குகள் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட விலங்குகளில் கினிப் பன்றிகள், அணில் வகைகள், சுகர் கிளைடர்கள், புறாக்கள் மற்றும் முள்ளம்பன்றிகள் அடங்கியுள்ளன என்று சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் கண்டி, திகனை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டது.
சுங்க அதிகாரிகள் விசாரணையின் போது, சந்தேகநபருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட செல்லப்பிராணிகளை மீண்டும் தாய்லாந்தின் பேங்காக் நகருக்கே திருப்பி அனுப்ப தீர்மானிக்கப்பட்டு, அவற்றை தாய் ஏர்வேஸ் விமான நிறுவனத்திற்கு ஒப்படுத்தியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நேபாள வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் தொலைபேசியில் உரையாடல்.!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஷிசிர் கனாலுடன் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டுள்ளார். நேபாளத்தில் நிலவும்…

56 0 0
இலங்கை செய்திகள்

மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற ஜனாதிபதி அநுரகுமார.!

கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவில் கலந்துகொள்வதற்காக கண்டிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, நேற்று வியாழக்கிழமை மல்வத்து…

53 0 0
இலங்கை செய்திகள்

22ஆவது திருத்த விவகாரம்; நீதிமன்றத்துக்கு அப்பால் செயற்பட அரசு தயார்.!

அரசமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்டுள்ள நிலைப்பாடு முற்றிலும் தவறானது என்றும், ஒருசில குறுகிய தரப்பினரது எதிர்ப்புகளுக்காக இத்தீர்மானத்தை மீளப்பெறப் போவதில்லை என…

58 0 0
இலங்கை செய்திகள்

நேபாள வெள்ளப்பெருக்கை அடுத்து இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, அப்பகுதியில் நிலநடுக்கம் மற்றும் பனிச்சரிவு காரணமாகவே உருவாகியுள்ளது என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் முன்னாள்…

65 0 0