மற்றவர்களின் கியூ.ஆர் குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் மோசடி.!
மற்றவர்களுக்குச் சொந்தமான கியூ.ஆர். குறியீடுகளை தவறாகப் பயன்படுத்தி எரிபொருள் பெற்றுக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்பாக 1000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது.அந்த அமைச்சின் செயலாளர் வர்ண ஸ்ரீ தனபாலின் தெரிவித்ததாவது:
இந்தப் முறைப்பாடுகள் தொடர்பாக பொலிஸாருடன் இணைந்து விரிவான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
கிடைத்துள்ள முறைப்பாடுகளில் 150-க்கும் மேற்பட்டவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையில் சில சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்புச் சோதனைக் கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகநபர்களைக் கைதுசெய்வதில் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.செயலாளர் வறுத்தவரை, சில சந்தர்ப்பங்களில் அறியாமை அல்லது தவறான புரிதல் காரணமாக மற்றவர்களின் கியூ.ஆர். குறியீடுகளைப் பயன்படுத்திய சம்பவங்களும் இந்த முறைப்பாடுகளில் இடம்பெற்றுள்ளன.