ரவிராஜ் கொ*லை வழக்கு: பிரதிவாதிகள் விடுதலை உத்தரவு இரத்து.!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கில் பிரதிவாதிகளை விடுவிக்கும் மேல்நீதிமன்ற உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிரதிவாதிகளை விடுவிக்குமாறு முன்னதாக மேல்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த உத்தரவை சவாலுக்குட்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.அந்த மனுவை ஆராய்ந்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை உத்தரவை இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.