உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

நுவரெலியாவில் வேகமாகப் பரவி வரும் காட்டுத்தீ.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
24 பார்வைகள்

நுவரெலியா ஒலிபண்ட் பகுதியில் நேற்று 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி நானுஓயா கிளாசோ தோட்டத்திற்கு மேல் பகுதியில் நடு காட்டுப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சியளித்து வருகிறது.

இவ்வாறான சம்பவங்கள் விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலாகும். காட்டுப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது .

தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் மலையகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற விஷமிகளின் தீ வைப்புகள் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலால் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன் காட்டில் உள்ள விலங்குகள், பறவை இனங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மலைப்பாங்கான பகுதிகளில் இருந்து வரும் சகல நீர் ஊற்றுகளும் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு சில பகுதிகளில் தற்போது குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் உள்ளது.

வனப் பகுதிகளுக்கு தீ வைப்பவர்களை அடையாளம் கண்டு உடன் அந்த பகுதியில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு அல்லது அருகில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு தகவல் தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

30 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0