உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

ஹட்டன் டிக்கோயா நகர சபையில் பதற்றம்; முன்னாள் தலைவர் வெளிநடப்பு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஹட்டன் டிக்கோயா நகர சபையில் நேற்று (மார்ச் 24) நடைபெற்ற சபை அமர்வின் போது கடும் பதற்ற நிலை ஏற்பட்டது. நகர சபைத் தலைவர் அசோக கருணாரத்ன அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில், நகர சபை உறுப்பினரும் முன்னாள் தலைவருமான அழகுமுத்து நந்தகுமார் சபை நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.

மக்கள் பிரச்சினைகள் குறித்து கடும் குற்றச்சாட்டு.

8சபை அமர்வின் போது உரையாற்றிய உறுப்பினர் அழகுமுத்து நந்தகுமார்,

கடந்த 9 மாதங்களாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமை.

குறிப்பாக குடிநீர் தட்டுப்பாடு மற்றும் குப்பை மேலாண்மை பிரச்சினைகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது,
என கடுமையாக குற்றம்சாட்டினார்.

வார்த்தைப் பிரயோகம் சர்ச்சை
இந்நேரத்தில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் சபையில் இருந்த பிற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. இதனால் சபையில் பரபரப்பு நிலை உருவானது.

முன்னாள் தலைவர் அழகுமுத்து நந்தகுமார் சபையிலிருந்து வெளியேறிய பின்னரும், தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள்,
“சபை அமர்வில் இவ்வாறான தரக்குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது ஏற்க முடியாதது” என்று கண்டனம் வெளியிட்டனர்.

வெளிநடப்பு
“பயனற்ற சபை அமர்வுகளில் கலந்து கொண்டு நேரத்தை வீணாக்குவதை விட, என் தனிப்பட்ட பணிகளை கவனிப்பது சிறந்தது” என தெரிவித்து உறுப்பினரும் முன்னாள் தலைவருமான அழகுமுத்து நந்தகுமார் சபையை புறக்கணித்து வெளியேறினார்.

இந்த சம்பவம் ஹட்டன் டிக்கோயா நகர சபையின் செயற்பாடுகள் குறித்து புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் நகர சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்களின் செயற்பாடுகளும் மந்த கதியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0