உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

தங்கக் கடத்தலை அதிரடியாக முறியடித்த கடற்படை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
22 பார்வைகள்

யாழ்ப்பாணம், மாதகல் கடல் வழியாகப் படகு மூலம் இந்தியாவுக்குப் பெருந்தொகைத் தங்கத்தைக் கடத்திச் செல்ல முயன்ற இருவரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, சுமார் 6 கிலோவுக்கும் அதிக எடையுடைய தங்கக் கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

மாதகல் கடற்பரப்பினூடாகச் சர்வதேச கடல் எல்லை வழியாகத் தங்கம் கடத்தப்படுவதாகக் கடற்படையினருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகொன்றை நடுக்கடலில் வழிமறித்துச் சோதனையிட்டனர்.

கடற்படையினரின் தீவிர சோதனையின் போது, அந்தப் படகிலிருந்து 6 கிலோ 85 கிராம் எடையுடைய தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும், அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட தங்கம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான கடல் மார்க்கக் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், வடக்குக் கடற்பரப்பில் கடற்படையினர் தமது கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

81 0 0