துப்பாக்கியுடன் ஒருவர் கைது.!
கடுவலை – வெலிவிட்ட பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மதியம் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கடுவலை – வெலிவிட்ட பகுதியை சேர்ந்த 47 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கடுவளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.