உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஈரான் கப்பல் விவகாரம்: அழிவைத் தடுத்த அநுர.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
37 பார்வைகள்

ஈரான் கப்பல் விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கு அமைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எடுத்துள்ள தீர்மானங்கள் மற்றும் நெருக்கடி முகாமைத்துவமானது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜனநாயக இடதுசாரி முன்னணியின் காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“உலக அரசியல் தற்போது பற்றி எரிகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் இணைந்து முழு உலகின் அமைதிக்கும் எதிராகச் செயற்படுகின்றார்கள்.

இந்தியாவில் இராணுவப் பயிற்சிக்காகச் சென்ற ஈரான் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியமை அதன் கோழைத்தனமான போக்கை வெளிப்படுத்துகின்றது. இது சர்வதேச மட்டத்தில் இந்தியாவின் மீதும் சில விமர்சனங்களை எழுப்பியுள்ளது.” – என்றார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமெரிக்காவுடன் ‘சோபா’ ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட எடுத்த முயற்சி குறித்தும் இதன்போது அவர் எச்சரித்தார். அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால், இலங்கை இன்று நேரடிப் போர் தாக்குதல்களுக்கு உள்ளாகியிருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“தற்போதைய இக்கட்டான சூழலில், ஈரான் கப்பல் விவகாரத்தை ஜனாதிபதி சர்வதேச சட்டங்களுக்கு அமையக் கையாண்டுள்ள விதம் பாராட்டத்தக்கது. இதனை அரசியல் இலாபத்திற்காக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக் கூடாது. நிலைமையின் பாரதூரத்தை உணர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது பதவிக்கு ஏற்றாற்போல் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.” – என்றும் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0