திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி.!
கம்பளையில் உள்ள பிரதான சாலையின் நவ குருகல பகுதியில் இன்று ஒரு முச்சக்கரவண்டி திடீரென தீப்பற்றி முழுமையாக எரிந்து நாசமானது.
குறித்த முச்சக்கரவண்டி பயணித்துக் கொண்டிருக்கும் போதே, திடீரென தீப்பற்றியதாகக் கூறப்படுகிறது.
எனினும், அதில் பயணித்திருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.