போதைப்பொருளுடன் இருவர் கைது.!
மஸ்கெலியாவில் ஹேஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை மஸ்கெலியா பொலிஸார் மவுஸ்சாகலை நீர்த்தேக்க பகுதியில் வீதி தடை இட்டு வாகனங்களில் சிவனடிபாத மலைக்கு வரும் யாத்திரிகர்களை சோதனை இட்ட போது ஹேஷ் என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் மாத்தளை பகுதியில் உள்ள உக்குவலை பகுதியைச் சேர்ந்த 19 வயது, 20 வயதுடைய இருவர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அவர்களிடம் இருந்து 15 -20 மில்லி கிராம் ஹேஷ் எனும் போதைப்பொருள் கைப்பற்றபட்டுள்ளது.
இருவரும் நேற்று 5 ஆம் திகதி மாலை ஹட்டன் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.