அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் புதிய பொறுப்பதிகாரி பதவியேற்பு.!
அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.எஸ்.ஜே. சம்பத்சம்பத் ஹீங்கந்த அவர்கள் இன்று புதன்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.பௌத்த மற்றும் இந்து சமய ஆசீர்வாத நிகழ்வுகளுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில், அவர் அதிகாரப்பூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இதற்கு முன் கடந்த நான்கு மாதங்களாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய இவர், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டு பணிகளைத் தொடங்கியுள்ளார்.