நுவரெலியாவில் பாம்பு தீண்டி தொழிலாளர் வைத்தியசாலையில் அனுமதி.!
நுவரெலியா மாவட்டத்தில் பாம்பு தீண்டியதால் ஒருவர் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று ரம்பொடை வெதமுல்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை தேயிலை மலையில் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது குறித்த தொழிலாளி பாம்பு தீண்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
காலை 10.30 மணியளவில், தேயிலைச் செடிகளின் அடிப்பகுதியில் உள்ள புற்களை அகற்றிக் கொண்டிருந்தபோது செடிகளின் கீழ் மறைந்திருந்த விரியன் பாம்பு தீண்டியதாக ஆரம்பத் தகவல்கள் கூறுகின்றன.பாம்பு தீண்டியவர் 39 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.அவர் உடனடியாக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.