உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கடவுச்சீட்டு மோசடி; இலங்கைப் பெண் இந்தியாவில் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இந்திய கடவுச்சீட்டு பெற்று, அதன் ஊடாக இலங்கைக்கு வருகை தர முயன்ற 48 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த குறித்த பெண் கடந்த 2015 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார். இந்தியப் பிரஜை ஒருவரைத் திருமணம் செய்த இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.

இந்தியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக ஆதார் அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அவர் பெற்றுள்ளார். இந்த ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர் இந்திய கடவுச்சீட்டையும் பெற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 02ஆம் திகதி குறித்த கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சென்னை விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கைக்கு வருகை தர முயன்றபோது, வெளிநாட்டவர் பிராந்திய பதிவு அலுவலக அதிகாரிகளால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்திய மத்திய குற்றப்பிரிவின் கடவுச்சீட்டு மோசடி தடுப்புப் பிரிவினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும் இதேபோன்ற குற்றச்சாட்டில் மற்றொரு இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

63 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

67 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

52 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

74 0 0