கோர விபத்து; போக்குவரத்து பாதிப்பு.!
கொழும்பு – பிலியந்தலை வீதியின் ரத்தனபிட்டி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து காரணமாக அந்த வீதியில் தற்போது பாரிய போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறிய லொறியும் பாடசாலை பேருந்தும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
மோதிய வேகத்தில் குறித்த வாகனங்கள் வீதியோரமாக இருந்த மின் கம்பம் ஒன்றிலும் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக 120 ஆம் மைல்கல் வீதியில், பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கிய திசையிலான வாகனப் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள பொலிஸார், விபத்துக்குள்ளான வாகனங்களை வீதியிலிருந்து அகற்றி போக்குவரத்தைச் சீர்செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் மின் கம்பத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் மின்சார சபையினருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.