உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மத்திய கிழக்கு போர்: அரசின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

“அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்டிருந்த நம்பிக்கை முற்றாக குலைந்துவிட்டது,” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.இன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில், மத்திய கிழக்கில் இடம்பெற்று வரும் போர்ச் சூழல் குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.


மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து வருவதாகவும், இதனால் உலகளவில் பாரிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு நெருக்கடி உருவாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.போர் ஆரம்பமானதுமே நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் இரவு, பகல் என நீண்ட வரிசைகளில் காத்திருப்பதாக அவர் தெரிவித்தார்.


எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என சபையில் ஜனாதிபதி உறுதி அளித்திருந்ததை நினைவுகூர்ந்த அவர், நிலைமையை கருத்தில் கொண்டு அரசாங்கம் முன்கூட்டியேசவால்களை வெளிப்படுத்தி, உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
அவ்வாறு செய்திருந்தால் பொதுமக்கள் தேவையற்ற பதற்றத்துடன் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது எனவும் அவர் கூறினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

61 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

66 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

51 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

73 0 0