வருடத்தின் முதல் சந்திர கிரகணம் இலங்கையில் தென்பட்டது.!
புத்தளம் மாவட்டம் உடப்பு கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் இந்து ஆலயத்தின் முன்பாக, மாலை சுமார் 6.35 மணியளவில் இந்த அரிய வானியல் நிகழ்வைக் காணக்கிடைத்தது. பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் இதைக் கவனித்தனர்.இந்நிலையில், கிரகணம் நிறைவடைந்த பின்னரே ஆலயத்தில் வழமையான பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைந்தபோது, பூமியின் நிழல் நிலவின் மீது படுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.இது முழு சந்திர கிரகணமாக இருந்தபோதிலும், நிலவு அடிவானத்திற்குக் கீழ் அமைந்திருந்ததால், இலங்கையில் இது பகுதி சந்திர கிரகணமாகவே தென்பட்டது.
வானம் தெளிவாகவும் மேகமூட்டமின்றியும் இருந்தால், கிழக்கு திசை அடிவானம் தெளிவாகத்தெரியும் உயரமான அல்லது திறந்தவெளி பகுதிகளில் இருந்து இந்தக் காட்சியைக் காண முடியும் என ஆர்தர் சி. கிளார்க் மையத்தின் தலைவர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்திருந்தார்.