மன்னாரில் விசேட சந்திப்பு – மாவட்ட நிலைமை குறித்து கலந்துரையாடல்.!
மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை மற்றும் முன்னாள் பிரதமரின் மத விவகார இணைப்பு செயலாளரும், அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவருமான அதி வணக்கத்துக்குரிய பிதா அருட்கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ ஆகியோருக்கிடையில் இன்று (03) மதியம் விசேட சந்திப்பு இடம்பெற்றது.
மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அதி வணக்கத்துக்குரிய பிதா எஸ். சந்துரு பெர்னாண்டோ நல்லெண்ண விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது மன்னார் மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் பல்வேறு சமூக, மத மற்றும் அபிவிருத்தி சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.சந்திப்பு அமைதியான மற்றும் நட்புறவான சூழலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.