உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

வாழைச்சேனை கிராமப் பெயர் மாற்றம் விவகாரம் – அரசியல் சர்ச்சை தீவிரம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வாழைச்சேனை கொண்டையங்கேணி கிராமம் இன்று (03.02.2026) “கொண்டையங்கேணி முஸ்லிம் கிராமம்” என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் தனபாலசிங்கம் நிர்மலன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.


அவர் வெளியிட்ட கருத்தில், தமிழர்களின் பூர்வீக கிராமப் பெயர்களை மாற்றி, எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் வேறு சமூகத்தினர் வாழ்ந்ததாக காட்டும் வகையில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன என குற்றம் சாட்டியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகள் இனங்களுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அவற்றை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும், “கல்குடா” என்ற பெயர் பயன்படுத்தப்படுவது தொடர்பாக பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அமைப்புகள் தங்கள் பிரதேசங்களில் மட்டுமே செயல்பட வேண்டும்எனவும் கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


ஒரு இனத்தின் மொழி, அடையாளம் மற்றும் முகவரி மாற்றப்படுவது தொடர்பான விடயங்கள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார். இவ்விடயத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு தெளிவான நிலைப்பாட்டை வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

52 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

60 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

47 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

68 0 0