யாழில் திடீரென தீப்பிடித்து எரிந்த உந்துருளி.!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம்(2) உந்துருளி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
குறித்த பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த உந்துருளி திடீரென தீப்பிடித்து முழுவதுமாக எரிந்துள்ளது.
குறித்த உந்துருளி தானாகவே தீப்பற்றி எரிந்ததா, அல்லது யாராவது தீ மூட்டினரா என இதுவரை தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
சம்பவத்தையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

