நாகர் கோவில் பிள்ளையார் ஆலயத்தில் அநாகரீக செயற்பாடுகளில் ஈடுபடும் நன்னீர் மீன்பிடி தொழிலாளிகள்.!
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் தெற்கு சுடலைபிட்டி பிள்ளையார் கோவில் ஆலய வளாகத்தில் அப்பகுதியில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் சில தொழிலாளர்கள் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, ஆலயத்தின் புனித தன்மையை மதிக்காமல் போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுதல், மீன்பிடி உபகரணங்களை ஆலய வளாகத்தில் வைத்து விடுதல், தமது வாகனங்களை ஆலய வளாகத்துக்குள் நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செயற்பாடுகள் ஆலயத்தின் புனிதத்தை பாதிப்பதாகக் கூறி, ஆலய தொண்டர்கள் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர். ஆலய புனித பூமியை அவமதிக்கும் நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதற்கிடையில், சம்பந்தப்பட்டவர்கள்ஆலய மரியாதையை பேணி நடக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

