உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

உரைகள் இரத்தால் நாமல் அதிருப்தி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
27 பார்வைகள்

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் திட்டமிடப்பட்டிருந்த தனது உரைகள் இரத்துச் செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
“பல தலைமுறைகளாகச் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்கும், அறிவார்ந்த விவாதங்களுக்கும் பெயர்பெற்ற ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களில் உரையாற்ற நான் மிகுந்த ஆவலுடன் இருந்தேன். ஆனால், திட்டமிடப்பட்ட அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் காரணமாக அந்த நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

பல்கலைக்கழகங்கள் என்பவை விவாதங்களின் மூலம் தீர்வுகளைக் காணும் இடங்களாக இருக்க வேண்டுமே தவிர, அச்சுறுத்தல்கள் மூலம் கருத்துக்களை மௌனிக்கச் செய்யும் இடங்களாக மாறக்கூடாது.

எனது கருத்துக்களைக் கடுமையாக எதிர்ப்பவர்களுடன் கூட நேரடி விவாதத்தில் ஈடுபடுவதை நான் எப்போதும் வரவேற்கின்றேன். ஏனெனில், மாற்றுக் கருத்துக்கள் மோதிக் கொள்ளும் போதே உண்மையான நல்லிணக்கமும் முன்னேற்றமும் ஏற்படும். விவாதங்களைத் தடுப்பது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தி, சமூகத்தில் பிரிவினையையே வளர்க்கும்.” – என்று நாமல் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு அழைப்பு விடுத்த ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் ஒன்றியங்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ள அவர், எதிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு சூழலில் இத்தகைய விவாதங்கள் மீண்டும் அமையும் என்று தான் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0