உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

லண்டனில் நாமலுக்குப் பேரிடி; ஒக்ஸ்போர்ட் உரையும் இரத்து.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு மற்றுமொரு பின்னடைவாக, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவிருந்த அவரது விசேட உரையும் அதிகாரபூர்வமாக இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றவிருந்த உரை இரத்துச் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் தனது முடிவை அறிவித்துள்ளது.

இது குறித்து ஒக்ஸ்போர்ட் யூனியன் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த நிகழ்வில் பங்கேற்கவிருந்த மாணவர்கள் பலர் தங்களது பாதுகாப்பு மற்றும் சுதந்திரமாக கேள்விகளைக் கேட்கும் சூழல் குறித்து அச்சம் வெளியிட்டனர். ஒரு தரப்பினர் தங்களைப் பாதுகாப்பற்றதாக உணரும் ஒரு சூழலில் ஆரோக்கியமான விவாதத்தை முன்னெடுக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

லண்டனில் உள்ள தமிழ் மாணவர் அமைப்புகள், தமிழ் இளைஞர் அமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து வழங்கிய கடும் அழுத்தம் மற்றும் திட்டமிடப்பட்டிருந்த பாரிய போராட்டங்கள் காரணமாகவே இந்த இரட்டைத் தடைகள் ஏற்பட்டுள்ளன.

உரைகள் இரத்துச் செய்யப்பட்ட போதிலும், நாமல் ராஜபக்ஷ மற்றும் அவருடன் சென்றுள்ள சாகர காரியவசம், மிலிந்த ராஜபக்ஷ ஆகியோர் லண்டனில் உள்ள ஏனைய மத வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் சமூகத்துடனான சந்திப்புகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது.!

கிளிநொச்சி, கிராஞ்சி கடற்கரைப் பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டைகளைக் கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கிராஞ்சி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.…

42 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த தசாப்தத்திற்குள் 300 பில்லியன் அமெரிக்க டொலர் பொருளாதார இலக்கு.!

அடுத்த தசாப்தத்திற்குள் இலங்கையை 300 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பொருளாதாரமாக உயர்த்தும் இலட்சிய இலக்குடன் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது எனக் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்திப்…

52 0 0
இலங்கை செய்திகள்

யாழில் பல இடங்களில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்பு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் திருடப்பட்டு அடகு வைக்கப்பட்டிருந்த 43 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூவர் நேற்று திங்கட்கிழமை (24) கைது செய்யப்பட்டு…

69 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தொகை சீன சிகரெட்டுகளுடன் இருவர் கைது.!

சுமார் 83 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச்…

54 0 0