“மாகாண சபைத் தேர்தலை அநுர தலைமையிலான அரசு நடத்தாது – ராஜித தெரிவிப்பு.!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எனத் தான் நம்பவில்லை என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“அரசுக்கான மக்கள் செல்வாக்கு வீழ்ச்சியடைந்து வருகின்றது. எனவே, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என நான் நம்பவில்லை.ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணையும் என நம்புகின்றேன். இதற்கு சஜித் பிரேமதாஸ இணங்காவிட்டால்கூட இரு தரப்பு இணைவு நிச்சயம் நடக்கும்.
இலங்கையில் தற்போதைய சூழ்நிலையில் சவாலை ஏற்கக்கூடிய தலைவராக ரணில் விக்கிரமசிங்க மட்டுமே திகழ்கின்றார்.” – என்றார்.