ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐவருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.!
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க இன்று வெள்ளிக்கிழமை (23) வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சந்தேக நபர்களை எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.