27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

வளர்ப்பு நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு – யாழில் சம்பவம் !

யாழில் குடும்பப் பெண்ணொருவர் வளர்ப்பு நாய் கடிக்கு உள்ளாகிய நிலையில் நேற்று திங்கட்கிழமை (26)  உயிரிழந்துள்ளார்.

காரைக்காட்டு வீதி, வண்ணார் பண்ணை பகுதியைச் சேர்ந்த மகேந்திரம் சாந்தி (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த பெண்ணுக்கு கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி வளர்ப்பு நாய் கையில் கடித்துள்ளது. இந்நிலையில் அவர் ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு பக்றீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தோல் வியாதி ஏற்பட்டு நேற்று திங்கட்கிழமை அதிகாலை காலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related posts

சிங்கள தேசத்தின் அடிமையில் இருந்து தமிழர்கள் விடுபடும்வரை தமிழ் மக்களின் உரிமை குரலை எவரும் நசுக்கமுடியாது

sumi

மரவள்ளி இலைகள் ஏற்றுமதி; வடக்கு மக்களுக்கு அரிய வாய்ப்பு!

User1

விபத்தில் 4 சுற்றுலாப்பயணிகள் காயம்

sumi

Leave a Comment