காயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன் உ*யிரிழப்பு.!
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேதமுல்ல பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட 26 வயதுடைய இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
லிலீஸ் லேன் பகுதி, வேதமுல்ல தோட்டம், ரம்பட முகவரியில் வசித்து வந்த சிவலிங்கம் ஜெயகிருஷ்ணா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் நேற்று 15ஆம் திகதி வேதமுல்ல மதுபானசாலைக்கும் வேதமுல்ல சந்திக்கும் அருகிலுள்ள பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு, 1990 அவசர நோயாளர் காவுவண்டி மூலம் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா வைத்தியசாலை பொலிஸாரினால் இன்று கொத்மலை பொலிஸ் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
